பாலக்கோட்டில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த கடைகள் இயங்க தடை, அபராதம் .
தருமபுரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை , நடமாட்டத்தை அறவே தடுக்க உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல்துறை இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
தருமபுரி உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா, மற்றும் பாலக்கோடு துணை காவல் கண்காணிப்பாளர் மனோகரன் , காவல் ஆய்வாளர் பாலசுந்தரம் அவர்கள் பாலக்கோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தீவிர சோதனை நடவடிக்கை மேற்கொள்ள காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் பாலக்கோடு காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள், காவலர்களுக்கு உத்தரவிட்டனர்.அதன்அடிப்படையில், தீவிர சோதனையில் பாலக்கோடு கோட்டை தெருவில் ஒரு மளிகை கடையிலும், தருமபுரி மெயின் ரோடு போக்குவரத்து பணிமனை அருகில் ஒரு பெட்டி கடை என இரண்டு கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூல் லீப் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் கண்டெடுத்து பறிமுதல் செய்யப்பட்டது.

பாலக்கோடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் கோகுல் முதல் தகவல் அறிக்கை பதிந்து மேல் நடவடிக்கைக்கு மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு பரிந்துரை செய்ததன் அடிப்படையில், உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா, அவர்கள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்த 2 கடைகளில் ஏற்கனவே ஒரு முறை தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்து பிடிபட்டு அபராதம் விதிக்கப்பட்டு, மீண்டும் மறுபடியும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த மளிகை கடை விற்பனையாளருக்கு ரூபாய்.50000 அபராதமும், முதல் முறையாக பிடிபட்ட பெட்டி கடை விற்பனையாளருக்கு ரூபாய்.25000மும் அபராதம் விதித்து முறையே 30 மற்றும் 15 தினங்கள் கடை இயங்க தடை விதித்து உத்தரவிட்டார்.
அதனை காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் , பாலக்கோடு காவல் நிலைய சிறப்பு நிலை உதவி ஆய்வாளர் சிவப்பிரகாசம் உடன் தலைமை காவலர் புவனா ஆகியோர் இணைந்து மேற்படி இரண்டு கடைகளுக்கும் நேரில் சென்று நோட்டீஸ் வழங்கி உடன் அபராதம் செலுத்திடவும், மறு உத்தரவு வரும் வரை கடை திறக்கக் கூடாது என எச்சரித்து கடையை மூட செய்தனர்.

