தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ 18000, வழங்க யுடியூசி வலியுறுத்தல்.
யுடியூசி நகராட்சி, பேரூராட்சி பணியாளர் சங்கத்தின் தருமபுரி மாவட்ட மாநாடு தருமபுரி பெரியார் மன்றத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மணிவண்ணன, மாதையன் தலைமை வகித்தார்.மாவட்ட துணை செயலாளர் என்.சரவணன் வரவேற்றார்.
தமிழ்நாடு உள்ளாட்சித்துறை பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் க.அறவாழி மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாநிலபொது செயலாளர் சி.கலியமூர்த்தி,ஊர்தி ஓட்டுநர் சங்க மாநில தலைவர் இ.பி.புகழேந்தி,யுடியூசி மாநில தலைவர் வி.ராஜேந்திரன்,முனிசிபல் பஞ்சாயத்து பொது பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி,தமிழ்நாடு பணியாளர் சங்க மாநில செயலாளர் வடிவேல்,மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் காவேரி வாழ்த்தி பேசினார்.

கூட்டத்தில் நகராட்சி,பேரூராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள்,மகளிர் குழு மூலம் பணி செய்யும் பணியாளர்களுக்கு அரசாணை 62 ன் படி குறைந்தபட்ச ஊதியம் ரூ 18,000 வழங்க வேண்டும்.சேமநல நிதி வருடம் ஒருமுறை கணக்கிட்டு,கணக்கீட்டு ரசீது வழங்க வேண்டும்.கூட்டுறவு கடனை பிடித்தம் செய்தயுடன்,உடனடியாக சங்கத்தில் பணத்தை செலுத்தி ரசீது தரவேண்டும்.காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.15 ஆண்டுகளாக பணியாற்றுபவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்.
துடைப்பம்,கையுறை,சோப்பு,உள்ளிட்ட உபகரணங்களை வழங்க வேண்டும்.மருத்துவ விடுப்பு,ஈட்டிய விடுப்பு ஊதியத்தை விரைவாக வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் வலியுறுத்தப்பட்டன.மாநாட்டில் பதிய மாவட்ட பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

