தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் 30 – ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம்
தமிழ்நாடு முஸ்லிம்முன்னேற்ற கழகம் 30 – ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு
அரூர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மேக்ஸிவிஷன் கண்மருத்துவமனை இனைத்து நடத்தும் மாபெரும் இலவச கண்பரிசோதனை முகாம் செப் – 8 அன்று அரூர் மதரஸா காம்ப்ளக்ஸ் மஜீத் தெரு வில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு எஸ்.சுல்தான் தலைமை வகித்தார். மாவட்ட மருத்துவசேவை அணி துணை செயலாளர் ஏ.நூர்பாஷா வரவேற்றார்.மாவட்டதலைவர் என். சுபேதார் முகாமை துவக்கிவைத்தார்.
சிறப்பு அழைப்பார்கள்
ஏ.எம்.எஸ். ஷபீர் ,ஜாமியா பள்ளி நிர்வாகிகள் முத்துவல்லி ஏ.அப்துல்ரவூப், செயலாளர் ஜே.அப்துல்ரஹ்மான் ஆகியோர் பங்கேற்று பேசினர். மேலும் மாவட்ட பொருளாளர் எம். இதயத்துல்லா மாவட்ட துணைத் தலைவர் ஏ.நியாஸ் ஊடக பொறுப்பாளர் ஏ.தஸ்தகீர் விழிஇலியாஸ், நகர துணை தலைவர் மாபுபாஷா,நகர பொருளாளர் ஏ.சான்பாஷா நிர்வாகிகள் சுலைமான் மனிதநேயமக்கள்கட்சி செயலாளர் ஹனிபாரசூல்,நிர்வாகிகள் நூர்முஹம்மதுகான் இமாத்முகமது மற்றும் ஜாமத்தார்கள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நகரசெயலாளர் பி.ரபீக் நன்றி கூறினார்

