2026 சட்டமன்ற தேர்தலில் திமுக மீண்டும் வெற்றிபெற தொண்டர்கள் உழைக்கவேண்டும். முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் பேச்சு
தருமபுரி மாவட்டம்,பாலக்கோடு தனியார் மண்டபத்தில் பாலக்கோடு மத்திய ஒன்றிய திமுக சார்பில் செயல்வீரர்கள் மற்றும் பொது உறுப்பினர்கள் கூட்டம் மத்திய ஒன்றிய கழக செயலாளர் முனியப்பன் தலைமையில் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பாலக்கோடு பேரூர் கழகச் செயலாளர் பி.கே.முரளி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சையத் முர்த்துஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், ஒன்றிய கழக செயலாளர்கள் வழக்கறிஞர் கோபால்,கிருஷ்ணன்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி கலந்து கொண்டு நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பெருவாரியான வாக்குகள் பெற்று தந்து வெற்றி பெற செய்த தொண்டர்களும் நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்து சிறப்புரை ஆற்றினார்.
இக்கூட்டத்தில் தூள் செட்டி ஏரிக்கு விரைவாக தண்ணீர் கொண்டு வர வேண்டும் எனவும், பாலக்கோடு மத்திய ஒன்றியம் சார்பில் உள்ள 242 பூத்துகளிலும் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் பெறுவதற்காக கழகத்தினர் அனைவரும் உழைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து பேசிய மேற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் அவர்கள் வரும் 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.அதனை தொடர்ந்து பேசியவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அனைத்து தரப்பு பொதுமக்களுக்கும், பயனளிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகிறார். குறிப்பாக மகளிர் உரிமைக் தொகை, புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், மகளிருக்கான விடியல் பயணம், பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், கிராம புற வளர்ச்சிக்கான நல திட்டங்கள் என பல்வேறு சிறப்பு வாய்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். என பேசியவர்,வருகின்ற உள்ளாட்சி தேர்தல், கூட்டுறவு தேர்தல், 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர்கள் பெருவாரியான வெற்றி பெற தொண்டர்கள் அனைவரும் உழைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இக்கூட்டத்தில் ஒன்றிய அவைத்தலைவர் இராஜமணி,துணை செயலாளர்கள் ரவி,ஆறுமுகம்,அற்புதம் செந்தில், பொருளாளர் குமார், மாவட்ட பிரதிநிதிகள் கவுன்சிலர் முத்துசாமி, மணி,முருகன், முன்னாள் சேர்மன் நாகராஜன்,கவுன்சிலர் அழகுசிங்கம்,ஒன்றிய பிரதிநிதிகள் மற்றும் கிளைக் கழக செயலாளர் அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

