காரிமங்கலம் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பல்வேறு இடங்களில் ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு
தருமபுரி மாவட்டம் காரியமங்கலம் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு மேற்கொண்டார்.
பெரியான அல்லி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் ஆய்வு செய்து பொதுமக்கள் கோரிக்கைகள் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வருவாய் ஆய்வாளர் அவர்களுக்கு அறிவுறுத்தினார்
பின்னர் கெரகோட அல்லி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் அங்கு செயல்பட்டு வரும் இ -சேவை மைய செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து கேரகோட அல்லி அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்து குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகள் அதற்காக கொள்முதல் செய்து வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களின் தரத்தினை நேரடியாக ஆய்வு செய்து குழந்தைகளுக்கு சீரான விகிதத்தில் உணவு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் அங்கன்வாடி பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்
பின்னர் காரிமங்கலம் பேரூராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் மற்றும் பேரூராட்சி நிதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.

காரிமங்கலம் அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து விடுதியில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தயாரிக்கும் கூடம் மற்றும் குடிநீர் வசதிகள், மின்சார வசதி, கழிப்பறை வசதிகளை நேரடியாக ஆய்வு செய்து மாணவர்களுக்கு சுத்தமாகும் சுகாதாரமாகவும் உணவுகளை தயார் செய்து வழங்க அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது காரியமங்கலம் வட்டாட்சியர் கோவிந்தராஜ் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலா உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்

