மாநில அளவிலான தடகளப் போட்டிக்கு மாற்றுத்திறனாளிகள் வழியனுப்பி வைப்பு
மாநில அளவிலான தடகளப் போட்டியில் பஙகேற்க்கும் பெருமூளை முடக்குவாத மாற்றுத்திறனாளிகளை தருமபுரி சந்திரா ரெசிடன்சியில் வழியனுப்பி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

தருமபுரி மாவட்டத்தில் பெருமூளை முடக்குவாத மாற்றுத்திறனாளிகள் ஓட்டப்பந்தயம் , குண்டு எறிதல், தட்டுஎறிதல்,ஈட்டி எறிதல் ,வீல்சேர் துரோவிங் உள்ளிட்ட போட்டிகளில் தேர்வு பெற்ற 25 மாற்றுத்திறனாளிகள் சேலம் மகாத்மா காந்தி விளையாட்டரங்கில் மாநில அளவில் நடைபெறும் தடகளப் போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
இப்போட்டிகளில் பங்கேற்க்கும் மாற்றுத்திறனாளிகள் வழியனுப்பும் நிகழ்ச்சி தருமபுரி மாவட்ட செரிபிரல் பால்சி ஸ்போர்ட்ஸ் அசுவசேஷன் சார்பில் தருமபுரி சந்திரா ரெசிடன்சி முன்பு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில்
திமுக மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான முனைவர் பா.பழனியப்பன் மாவட்ட விளையாட்டு அலுவலர் தே.சாந்தி , திமுக மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் பி.எஸ்.சீனிவாசன்,திமுக தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கெளதம் தருமபுரி மாவட்ட செரிபிரல் பால்சி ஸ்போர்ட்ஸ் அசுவசேஷன் தலைவர் பி.சாக்ரட்டீஸ் செயலாளர் கே.எம்.ஜெயபூர்ணிமா,பொருளாளர் கரிகாலன்,ஜெயம் யோக ட்ரஸ்ட் நிறுவனர் ஜெயபிரியா உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்து பேசினர்.


