நல்லம்பள்ளியில் கலைஇலக்கிய பேராசன் ப.ஜீவானந்தம் 117 ஆவது பிறந்தநாள் விழா
கலை இலக்கிய பேராசன் ப.ஜீவானந்தம் அவர்களின் 117 ஆவது பிறந்தநாள் விழா தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் நல்லம்பள்ளி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு நல்லம்பள்ளி வட்ட கிளை தலைவர் கே இரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.வட்ட கிளை செயலாளர் வெ.பை.மாதையன் வரவேற்றார்.
ப.ஜீவானந்தம் அவர்களின் உருவப்படத்துக்கு தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளரும் இலளிகம் முன்னால் ஊராட்சி மன்ற தலைவருமான ஜெ பிரதாபன் மலர்தூவி மரியாதை செலுத்தினர் பின்னர் ஜீவானந்தம் வாழ்க்கை வரலாறு குறித்து பேசினார்.
விவசாய தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் ஜி .மாதையன் ஒன்றிய தலைவர் எல் .சி .கிருஷ்ணன்,மன்ற துணைச் செயலாளர் என். பி .ராஜி, ஆகியோர் பேசினர்.
இந்த நிகழ்சியில் விவசாய தொழிலாளர் சங்க மாநிலகுழு உறுப்பினர் அலமேலுஎத்துராஜ்,தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற உறுப்பினர்கள் சம்பத்,கோவிந்தராஜ்,மாது,கோவிந்தம்மாள்,காளியம்மாள்,பழனியம்மாள்,ஆராம்பு,கோவிந்தன்,ஜெயவேல்,ராஜா,நாகராஜன் மற்றும் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்,

