பென்னாகரம் பேருந்து நிலையம் தரமாக அமைக்க மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி அறிவுறுத்தல்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சி பென்னாகரம் பேருந்து நிலையம் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதை தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி .சாந்தி இன்று ஆக – 8 ஆய்வு செய்து பேருந்து நிலைய பணிகளை தரமாகவும் நிறைவாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்
இந்த ஆய்வின்போது உதவி இயக்குனர் பேரூராட்சிகள், பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்

