43 வருடமாக ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற வீரருக்கு கிராமமக்கள் உற்சாக வரவேற்பு
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே செலந்தினஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராணுவ வீரரான பரசுராமன் (60) , இவர் இந்திய எல்லை பாதுகாப்பு படையில் 43 வருடங்களாக பணியாற்றி கடந்த ஜூலை 31 ல் ஓய்வு பெற்றார்.
இவர் இந்திய எல்லை பாதுகாப்பு படையில் கான்டபிளாக பஞ்சாப்பில் பணியில் சேர்ந்து, தற்போது அதே பிரிவில் காவல் உதவி ஆய்வாளராக மிசோரமில் பணியாற்றி ஓய்வு பெற்றார்,
சொந்த கிராமத்திற்கு ஆக-3 அன்று வருகை தந்தவருக்கு பாலக்கோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோ.மாதப்பன் , திமுக மாநில விவசாய அணி துணைச் செயலாளர் சூட்டப்பட்டி சுப்பிரமணி,ஊர்பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடி அவரை வரவேற்கும் விதமாக ஆராத்தி எடுத்து, பட்டாசுகள் வெடித்து, மலர் மாலை அணிவித்து மரியாதை செய்து வீரரை ஊருக்குள் வரேவேற்றனர்.
அதன்பின் ஊருக்குள் அமைத்திருந்த வரவேற்பு மேடையில் ராணுவ வீரர் பரசுராமன் அவர்கள் ,சுதந்திர போராட்ட வீரர்களான நேதாஜி மற்றும் காந்திஜி படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார், அதன்பிறகு, மேல தால முழக்கத்துடன் பெண்கள் நடனமாடி அவரது வீடு வரை ஊர்வலமாக சென்று அவரை ஊர்பொதுமக்கள் கௌரவப்படுத்தினர்

