பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் தூய்மைபணியாளர்களுக்கு 6 மாத சம்பளம் வழங்க கோரி ஏஐடியுசி மனு.
பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மாதசம்பளம் வழங்கவேண்டும் என வலியுறுத்தி ஏஐடியுசி தருமபுரி மாவட்ட பள்ளி கல்வித்துறை தூய்மை பணியாளர் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுகொடுத்தனர்.
மனுவின் விபரம் பின்வருமாறு
தருமபுரி மாவட்டத்தில் அரசு தொடக்கப்பள்ளி நடுநிலை பள்ளி,உயர்நிலைப்பள்ளி ,மேல்நிலைப்பள்ளிகளில் தூய்மை பணியாளர்கள் பணியாற்றிவருகின்றனர்.குறிப்பாக நல்லம்பள்ளி,கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி,தருமபுரி,ஏரியூர், பென்னாகரம் ஆகிய ஒன்றியங்களில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் தூய்மை பணியாளர்களுக்கு 2024 ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை மாதசம்பளம் வழங்கியுள்ளனர்.அதன் பிறகு கடந்த 6 மாதங்களாக மாதசம்பளம் வழங்கவில்லை எனவே இவர்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு உடனடியாக மாதசம்பளம் வழங்கவேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநிலசெயலாளர் ஜே.பிரதாபன்,தூய்மைபணியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் செல்வி பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் மனுகொடுத்தனர்.
