தருமபுரி ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிப்பை கண்டித்து மறியல் போராட்டம்.
ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை புறக்கணித்த ஒன்றிய பிஜேபி அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) சார்பில் ஆக- 1 அன்று தருமபுரி மாவட்டத்தில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

தருமபுரி தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஆர்.சிசுபாலன் தலைமைவகித்தார்.
மாநிலக்குழு உறுப்பினர் பி.டில்லிபாபு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் எஸ்.தேவராசன் மாவட்ட துணை செயலாளர் மாதேஸ்வரன் , தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநிலசெயலாளர் ஜே.பிரதாபன் ஒன்றியசெயலாளர் பிரசாத் ,
சிபிஐ(எம்.எல்) மாவட்ட செயலாளர் கே.கோவிந்தராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி.முருகன்,சிவராமன், ராமதிலகன்,அன்பழகன் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.நாகராசன்,எம்.முத்து ,எஸ்.கிரைஸாமேரி,நகரசெயலாளர் சி.முரளி,ஒன்றியசெயலாளர்கள் தருமபுரி என்.கந்தசாமி,பாலக்கோடு டி.எஸ்.ராமங்சந்திரன் ,நல்லம்பள்ளி எஸ்.எஸ்.சின்னராஜ் ,காரிமங்கலம் பி.ஜெயராமன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.என்.மல்லையன் ,கே.பூபதி ,ஏ.ஜெயா ஆகியோர் பங்கேற்று பேசினர்.முன்னதாக பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் இருந்து ஊர்வளமாக சென்று தருமபுரி தலைமை தபால் நிலையம் முன்பு மறியலில் ஈடுப்பட்டனர்.மறியலில் ஈடுபட்டோரை போலீசார் கைது செய்தனர்.

அரூர் ஸ்டேட் வங்கி முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.குமார் தலைமைவகித்தார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சோ.அருச்சுணன் ஆர்.மல்லிகா ,ஒன்றிய செயலாளர்கள் அரூர் பி.குமார்,பாப்பிரெட்பட்டி தி.வ.தனுசன் மாவட்டக்குழு உறுப்பினர் சி.வஞ்சி மற்றும் எஸ்.கே.கோவிந்தன் ,ஏ.நேரு,கே.என்.ஏழுமலை ,பி.வி.மாது,ஜோதி ஆகியோர் பங்கேற்று பேசினர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் காசி.தமிழ்குமரன்,மாநிலக்குழு உறுப்பினர் கமலா,ஒன்றியசெயலாளர் சிற்றரசு ஆகியோர் பங்கேற்று பேசினர்.
மறியலில் ஈடுபட்டோரை போலீசார் கைது செய்தனர்.

பென்னாகரம் இந்தியன் வங்கி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.மாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் கோபால் ஆகியோர் தலைமைவகித்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கலைசெல்வம் நிர்வாக குழு உறுப்பினர் வழக்கறிஞர் மாதையன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வே.விசுவநாதன், ரவி,ஆர்.சின்னசாமி , ஒன்றியசெயலாளர்கள் சின்னம்பள்ளி ஜி.சக்திவேல்,ஏரியூர் என்.பி.முருகன்,நகரசெயலாளர் வெங்கடாச்சலம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் அன்பு ஆ.ஜீவானந்தம்,குமார்,டி.ஆர்.சின்னசாமி,சி.ராஜி ஆகியோர் பங்கேற்று பேசினர் மறியலில் ஈடுபட்டோரை போலீசார் கைதுசெய்தனர்.

