தூய்மை பணியாளர்களுக்கு 7-ஆவது ஊதியக்குழுவின்படி உயர்த்தப்பட்ட நிலுவை ஊதியத்தை வழங்கக்கோரி மனு.
தூய்மைபணியாளர்களுக்கு 7 – ஆவது ஊதியக்குழுவின்படி உயர்த்தப்பட்ட நிலுவை ஊதியத்தை வழங்கக்கோரி தமிழ்நாடு கிராம் ஊராட்சி மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் தூய்மை காவலர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அச்சங்கத்தின் மாநிலதலைவர் ராஜேந்திரன் மனுகொடுத்துள்ளார்.
மனுவின் விபரம் பின்வருமாறு:
தருமபுரி மாவட்டத்தில் கிராம ஊராட்சியில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்களுக்கு 7 -ஆவது ஊதியக்குழுவின் படி உயர்த்தப்பட்ட நிலுவை ஊதியத்தை வழங்கவில்லை .
அதேப்போல் 2013 ல் நியமணம் செய்யப்பட்ட கூடுதல் தூய்மை பணியாளர்களுக்கும் ஏழாவது ஊதியக்குழுவின் படி உயர்த்தப்பட்ட நிலுவை ஊதியத்தை வழங்கவில்லை
ஆகவே 7 ஆவது ஊதியக்குழுவின் படி உயர்த்தப்பட்ட நிலுவை ஊதியத்தை அனைத்து பணியாளர்களுக்கும் விரைவில் வழங்க வேண்டும்.
மாதத்திற்கு இரண்டு முறை மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்வதற்கு மாதம் ரூ.300-ஐ எந்த ஊராட்சியிலும் இதுநாள் வரை வழங்கவில்லை. இந்த தொகையினை விரைவில் வழங்கவேண்டும். கிராம ஊராட்சிகளில் பணிபுரிந்து வரும் தூய்மை காவலர்களுக்கு மாதம் 5-ம் தேதிக்குள் ஊதியம் வழங்கவேண்டும். தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சியில் பணிபுரிந்து வரும் அனைத்து மேல் நிலை நீர்த் தேக்க தொட்டி இயக்குநர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியத்தை மாவட்ட ஆட்சியர் கருவூல அலுவலகத்தில் முறைப்படி கணக்கிட்டு வழங்கவேண்டும். என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

