ஆடிப்பெருக்கு விழா முன்னேற்பாடு குறித்து மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி ஒகேனக்கல்லில் ஆய்வு
வருகின்ற 2.8.2024 அன்று ஒகேனக்கல்லில் நடைபெறும் ஆடிப்பெருக்கு விழா முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்தும்ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 1,58,000 கனஅடிநீர்வந்துகொண்டிருப்பதை நேரில் பார்வையிட்டுவெள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும்ஒகேனக்கல் சுற்றுலா மேம்பாட்டு பணிகளின் முன்னேற்றம் குறித்தும் தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி ஜூலை -28 அன்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது வருவாய்த்துறை ஊரக வளர்ச்சித் துறை சுற்றுலாத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

