நிதிநிலை அறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி ஒதுககாத ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் பாலக்கோடு பஸ்நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒன்றிய பிஜேபி அரசு 2024 க்கான நிதிநிலை அறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி ஒதுக்கவில்லை இதனை கண்டித்தும் தமிழ்நாட்டிற்க்கு நிதி ஒதுக்காததையும் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நிதிநிலை அறிக்கையில் 5 சதவீதம் நிதி ஒதுக்கவேண்டும். மாற்றுத்திறனாளிகள் சட்டம் 2016 ஐ முழுமையாக அமுல்படுத்த வேண்டும்.அனைத்து மாற்றுத்திறனாளிகள் குடும்ப அட்டையையும் ஏஏஒய் அட்டையாக மாற்றித்தர வேண்டும்.
ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட துணைத்தலைவர் திம்மன் தலைமை வகித்தார்.
மாநிலபொருளாளர் கே.ஆர்.சக்கரவர்த்தி மாவட்ட தலைவர் கே.ஜி.கரூரான் வட்ட த
வட்ட செயலாளர் காரல் மார்க்ஸ் வட்ட பொருளாளர் கிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிபேசினர்

