அகரம் விதைத்திட்டம் 5287 மாணவர்களுக்கு கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது.
நடிகர் சூர்யா பெருமிதம்
அகரம் விதைத் திட்டத்திற்கு இது 15-ஆம் ஆண்டு. 12-ஆம் வகுப்பு வரையில் கிராமப்புற அரசுப் பள்ளியில் படித்த, 5,287 மாணவர்கள் 350க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் படிக்கும் வாய்ப்பை அமைத்து கொடுத்திருக்கிறது விதைத் திட்டம். 3,440 முன்னாள் மாணவர்கள், மற்றும் 1,850 இந்நாள் மாணவர்களும் இருக்காங்க. இத்தனை மாணவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்க தொடர்ச்சியாக உறுதுணையாக இருக்கும் தன்னார்வலர்கள், கல்லூரிகள், நன்கொடையாளர்கள், பயிற்சியாளர்கள், நிறுவனங்கள் மற்றும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவிச்சுக்கிறேன்.
ஊர் கூடித் தேர் இழுப்பது போன்றுதான் அகரம் பணிகள்.

மீண்டும் ஒவ்வொருவருக்கும் இத்தருணத்தில் வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.! என தென்னிந்தியாவின் முன்னணி நடிகர் சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

