பாலக்கோடு அருகே 5 ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் திட்டமுகாம்-திரளான பொதுமக்கள் பங்கேற்பு
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களுடன் முதல்வர் திட்டத்தினை தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 11-ஆம் தேதி அன்று தொடங்கி வைத்தார், அதன் தொடர்ச்சியாக, எந்தெந்த பகுதிகள் மிகவும் பின்தங்கிய மற்றும் மலைவாழ் மக்கள் அதிகமாக இருக்கக்கூடிய பகுதிகளை தேர்வு செய்து அத்தகைய பகுதிகளில் அரசின் அனைத்து துறையினுடைய அலுவலர்களையும் அழைத்துச் சென்று, அரசு திட்டங்களை எடுத்துரைத்து, அங்குள்ள பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறக்கூடிய ஒரு நிகழ்வாக அமைய வேண்டுமென்றுஉத்தரவிட்டுள்ளார்கள், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி,தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் பூகானஅள்ளி, செல்லியம்மன்பட்டி,பாடி,செக்கோடி,புலிக்கரை ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பயனடையும் வகையில் புலிகரை அரசு ஈ-சேவை மையத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் தலைவர்கள் சம்பத், சந்திரா நேரு,முருகன்,முகாமை தொடங்கி வைத்து பேசினர். இந்த முகாமில் கலைஞரின் வீடு வசதி திட்டம், முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, ஜாதி சான்றிதழ் உட்பட 12 அரசு துறைகள் சார்பில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள்பெறப்பட்டது. நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மதியம் 3-மணி வரை நடந்த முகாமில் பங்கேற்று கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
