நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி, மற்றும் வேலைவாய்ப்புடன், உயர்கல்வி-தேர்வு முகாம் : மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்
தமிழ்நாடு அரசு ‘நான்முதல்வன்’ திட்டத்தின்கீழ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் HCL-நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் ”பயிற்சி, மற்றும் வேலைவாய்ப்புடன், உயர்கல்வி-தேர்வு முகாம் – HCL Techbee “Early Career Program” வருகின்ற 26.07.2024 மற்றும் 27.07.2024 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளதால், 12-ஆம் வகுப்பு கலைப்பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்ற மற்றும் கல்லூரியில் பயிலும் முதலாம் ஆண்டு மாணாக்கர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம். என மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கனவு திட்டமான நான் முதல்வன் திட்டமானது 1.3.2022 அன்று துவக்கிவைக்கப்பட்டது. இந்த மாபெரும் திறன் மேம்பாட்டிற்கான திட்டமானது வெற்றிகரமாகசெயல்பட்டுக்கொண்டிருக்கின்றது. இதன் மூலம் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற்று வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இதன் தொடர்ச்சியாக HCLTech நிறுவனத்துடன் இணைந்து HCL Techbee பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புடன் உயர்கல்வி தேர்வு முகாமை நடத்த இருக்கிறது.
தமிழ்நாடு அரசு ‘நான்முதல்வன்’ திட்டத்தின்கீழ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் HCL-நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் ”பயிற்சி, மற்றும் வேலைவாய்ப்புடன், உயர்கல்வி-தேர்வு முகாம் – HCL Techbee “Early Career Program” தருமபுரியில் கீழ்கண்ட இடங்களில் வருகின்ற 26.07.2024 மற்றும் 27.07.2024 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது.
தருமபுரியில் ஜூலை 26.27
ஆகிய தேதிகளில் தருமபுரி
ஔவை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், தொடர்புக்கு 9789651825, 9944670684 பாலக்கோட்டில் ஜூலை -26 அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியிலும் தொடர்புக்கு 9789651825, 9944670684
இத்திட்டமானது மாணவர்கள் சிறு வயதிலேயே உலகளாவிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் தங்கள் பணியினை துவங்க வாய்ப்பளிக்கின்றது. 2023 அல்லது 2024- கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு கலைபாடப் பிரிவு (கணிதம் மற்றும் வணிகக்கணிதம் இல்லாத) பொதுத்தேர்வில் 75 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ள மற்றும் கல்லூரியில் பயிலும் முதலாம் ஆண்டு பயிலும் மாணவ மாணவிகளுக்கு ”நான்முதல்வன்” திட்டத்தின் கீழ் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புடன் உயர்கல்வி வழங்கப்படுகிறது.
வெற்றிகரமாக ஒரு வருடகால பயிற்சியினை முடிப்பவர்களுக்கு
HCL Tech-ல் நிரந்தர வேலைவாய்ப்பை (Associate Cohort: HR, Admin, Finance, Tax etc..) வழங்குவதோடு, அவர்களின் மேற்படிப்பை துவங்குவதற்கு வாய்ப்பினை தருகின்றது. ஒரு வருடகால பயிற்சியின் போது (Internship-ன்போது 3rd to 12th month) ஒவ்வொரு மாதமும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை ரூபாய் 10,000/- HCL Tech-ஆல் வழங்கப்படுகின்றது. பணியில் சேர்ந்தவுடனே துவக்கநிலை ஊதியமாக ஆண்டுக்கு ரூபாய் 1.70 இலட்சம் வரை (பணிநிலைக்கு ஏற்றாற் போல்) கிடைக்க வழிவகையுள்ளது. HCL Tech-ல் பணிபுரிந்து கொண்டே உயர்கல்வியைத் துவங்குவதற்கு Amity, KL University மற்றும் SASTRA உள்ளிட்ட பல்கலைக் கழகங்கள் வாய்ப்பினை தருகிறது. மேலும், அவர்களின் கல்விக்கட்டணத்தில் ஒரு பகுதியை HCL Tech நிறுவனம் வழங்குகிறது.
தகுதிகள்: 2023 அல்லது 2024 –ம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு கலைபாடப் பிரிவு (கணிதம் மற்றும் வணிகக்கணிதம் இல்லாத ) மாணவர்கள் பொதுத்தேர்வில் 75 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Commerce மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். முதலாம் ஆண்டு மாணவர்களும் இத்திட்டத்தில் பங்கு பெறலாம்.
பயிற்சிக்கட்டண விபரம் : Associate Cohort : INR 51,000/-, அரசுப்பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சிக்கட்டணம் (Associate Cohort : INR 51,000/) தமிழ்நாடு அரசுத் திறன் மேம்பாட்டுக் கழகம் வழங்கும்.இத்தேர்வு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் https://registrations. hcltechbee.com/ என்ற இணையத்தளத்தில் பதிவு செய்யலாம், மேலும், பதிவுசெய்வதற்கான வழிமுறைகளை https://youtu.be/yyAPZYtYP40 என்ற முகவரியிலும் காணலாம். மேலும் விவரங்களுக்கு 9789651825, 9944670684 உள்ளிட்ட தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

