மூடப்பட்ட கும்மனூர் ரயில் நிலையத்தை திறக்ககோரி தருமபுரி எம்பி ஆ.மணி ஒன்றிய அமைச்சரிடம் மனு.
தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ .மணி ஜூலை 25 இன்று ஒன்றிய அரசின் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை டில்லியில் உள்ள அவரது அலுவலகத்தில்சந்தித்து தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் ஜோதி அள்ளி ஊராட்சி சுற்று வட்டார பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரயில்வே தரைப்பாலம் அமைத்து போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தருவது குறித்தும்,

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கும்மனூரில் செயல்பட்டு வந்த ரயில் நிலையம் மூடப்பட்டதை மீண்டும் பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை மனுவினை வழங்கினார்

