தராசுகளில் முத்திரை குறித்து அதிகாரிகள் ஆய்வு: முத்திரை இல்லாத தராசு பறிமுதல்
தராசுகளில் முத்திரை இல்லாமல் சிறுகடை வியாபாரிகள் மற்றும் வாகனங்களில் காய்கறிகள் விற்பனை செய்வோம் தராசுகளில் முத்திரை இல்லாமல் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதைத் தொடர்ந்து தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் ஜூலை -24 அன்று வாரச்சந்தை நடந்தது. இதில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சேர்ந்த தொழிலாளர் துணை ஆய்வாளர் சாந்தி உதவி ஆய்வாளர் திவ்யா மதுரை ஆய்வாளர் அருண் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் கடைகளில் பயன்படுத்தப்படும் இரும்பு எடைகள் தராசுகள் மற்றும் எலக்ட்ரானிக் தராசுகளை ஆய்வு செய்தனர். அதில் முத்திரை இல்லாத தராசுகளை பறிமுதல் செய்தனர்.

