ஒன்றிய அரசின் வஞ்சிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை கண்டித்து அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ஒன்றிய அரசின் வஞ்சிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஜூலை -24 அன்று தருமபுரி மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியர் ஆசிரியர்களின் கோரிக்கைகளான ஓய்வூதியம், காலிப்பணியிடங்களை நிரப்புதல், 10 லட்சம் வரை வருமானவரி விலக்கு, உள்ளிட்டவற்றின் மீது எவ்வித அறிவிப்பும் இல்லாததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடத்தூர் பிடிஒ அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார்.மாவட்ட இணைசெயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அனுசுயா, கோரிக்கைகளை விளக்கிபேசினர்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவர் சதீஷ்,மாவட்ட இணைசெயலாளர் சுரேஷ்,வட்ட தலைவர் கார்த்திக் செல்வம்,வட்டசெயலாளர் ரமேஷ், ஆகியோர் வாழ்த்திபேசினர்.

பென்னாகரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் எம்.சுருளிநாதன் பேசினார்.
பாலக்கோடு பிடிஒ அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் மானிக்கம் தலைமை வகித்தார். மாவட்ட இணைசெயலாளர் குணசேகரன் சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தேவகி ஆகியோர் பேசினர்.
தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை திட்ட அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட தலைவர் ஸ்ரீநாத் தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் தெய்வானை சிறப்புறையாற்றினார்.

