தொழிலாளர் விரோத நான்கு சட்ட தொகுப்புகளை திரும்பபெற வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தொழிலாளர் விரோத நான்கு சட்ட தொகுப்புகளை திரும்பப்பெற வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பில் ஜூலை -24 அன்று தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிஐடியு மாநிலசெயலாளரும், ஒருங்கிணைப்பாளருமான சி.நாகராசன் தலைமைவகித்தார்.
சிஐடியு மாவட்ட செயலாளர் பி.ஜீவா மாநிலக்குழு உறுப்பினர் சி.கலாவதி , ஏஐடியுசி மாவட்ட செயலாளர் கே.மணி,நிர்வாகக்குழு உறுப்பினர் எம்.மாதேஸ்வரன்,எல்பிஎப், மாவட்ட தலைவர் கே.அன்புமணி,மாவட்ட செயலாளர் பி.எம்.சண்முகராஜா, ஐஎன்டியுசி மாவட்ட தலைவர் கே.சிவலிங்கம்,மாவட்ட செயலாளர் சி.சண்முகம் ,எச்எம்எஸ்,மாவட்ட செயலாளர் எம்.அர்ஜூனன்,பேரவை செயலாளர் ஆர்.முருகானந்தம், ஏஐசிசிடியு மாவட்ட செயலாளர் சி.முருகன், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.சிவராமன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிபேசினர்.

சர்வதிகாரத்தை நிலைநிறுத்தும் மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும்.ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களை திரும்பப்பெற வேண்டும்.தொழிலாளர் விரோத நான்கு சட்ட தொகுப்புக்களை திரும்பபெறவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
