பாலக்கோடு அருகே 3 ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் திட்டமுகாம்-திரளான பொதுமக்கள் பங்கேற்பு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுடன் முதல்வர் திட்டத்தினை தருமபுரி மாவட்டத்தில் கடந்த 12-ஆம் தேதி அன்று தொடங்கி வைத்தார், அதன் தொடர்ச்சியாக, எந்தெந்த பகுதிகள் மிகவும் பின்தங்கிய மற்றும் மலைவாழ் மக்கள் அதிகமாக இருக்கக்கூடிய பகுதிகளை தேர்வு செய்து அத்தகைய பகுதிகளில் அரசின் அனைத்து துறையின் அலுவலர்களை அழைத்துச் சென்று, அரசு திட்டங்களை எடுத்துரைத்து, அங்குள்ள பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறக்கூடிய ஒரு நிகழ்வாக அமைய வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி,தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் பேளாரஅள்ளி, எர்ரனஅள்ளி, கரகதஹள்ளி ஆகிய பஞ்சாயத்துகளை சேர்ந்த பொதுமக்கள் பயனடையும் வகையில் எர்ரனஅள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது.

இதில் பேளாரஅள்ளி ஊராட்சிமன்ற தலைவர் ராதாமாரியப்பன்,எர்ரனஹள்ளி ஊராட்சிமனற தலைவர் வளர்மதிசின்னவன், கரகதஹள்ளி ஊராட்சிமன்ற தலைவர் ராஜிமுத்துவேல் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்து பேசினர்.
இந்த முகாமில் கலைஞரின் வீடு வசதி திட்டம்,முதியோர்உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, ஜாதி சான்றிதழ் உட்பட 12 அரசு துறைகள் சார்பில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள்பெறப்பட்டது. நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முகாமில் பங்கேற்று கோரிக்கை மனுக்களை அளித்தனர்.இவர்களுடன் கவுன்சிலர் அழகுசிங்கம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
