விடுதலை போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா நினைவுதினம்: அவரது உருவப்படத்துக்கு ஆட்சியர் மலர்தூவி மரியாதை
விடுதலை போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் 99-ஆவது நினைவு நாளையொட்டி, மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள விடுதலை போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபத்தில் அன்னாரது நினைவிடத்தில் இன்று (23.07.2024) மலர் மாலை வைத்து, திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு விடுதலை போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நினைவு நாளையொட்டி, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் மணிமண்டபத்தில் உள்ள தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் நினைவிடம், நினைவுத்தூண் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிரமணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சு.மோகன், வட்டாட்சியர் இலட்சுமி, துணை காவல் கண்காணிப்பாளர் மகாலட்சுமி, பாப்பாரப்பட்டி பேரூராட்சித் தலைவர் பிருந்தா நடராஜன், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன், ஒன்றியக்குழு உறுப்பினர் பூங்கொடி மாதேஷ், ஒன்னப்பகவுண்டன அள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்செல்வி முருகன், பாப்பாரப்பட்டி செயல் அலுவலர் கோமதி, வட்டார வளர்ச்சி அலுவலர் சுருளிநாதன், வருவாய் ஆய்வாளர் சுஜாதா உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

