கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 75 ஆயிரம் கன அடியாக தண்ணீர் வரத்து உள்ளது
கர்நாடக கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து நேற்று மாலை 37,819 கன அடியாக இருந்த நிலையில் தற்போது 44,617 கன அடியாக அதிகரித்துள்ள
நிலையில்,அணையின் நீர்மட்டம் 124.80 அடியில் தற்போதைய நீர்மட்டம் 116.60 அடியாக உயர்ந்துள்ளதுஅணையில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு 754 கன அடியாக உள்ளது.
கபிணி அணைக்கு நீர் வரத்து நேற்று மாலை 52,869 கன அடியாக இருந்த நிலையில் தற்போது 49,452 கன அடியாக உள்ளதுஅணையின் நீர்மட்டம் 84 அடியில் 80.01 அடி உள்ளதுஅணையில் இருந்து உபரிநீர் திறப்பு 61200 கன அடி திறக்கப்பட்டுள்ளது.
நுகு அணை நிரம்பி, உபரிநீர் 7588 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறதுஇதனால் 3 அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு 75,748 கன அடியாக உள்ளது
