ஒன்றிய அரசின் திட்டங்களை அரூர் பகுதிக்கு அதிகளவில் பெற்று தருவேன். வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து
எம்பி ஆ.மணி பேச்சு
தருமபுரி மாவட்டம் அரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட திருவிக நகர் பேருந்து நிலையம் நான்குரோடு கச்சேரிமேடு ஆகிய இடங்களில் எம்.பி.ஆ.மணி பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிக்கு மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் தலைமை வகித்தார். நகர கழக செயலாளர் முல்லைரவி ஏற்பாட்டில் அறிஞர் அண்ணா, டாக்டர் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக அரூர் பேரூர் கழகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பொது மக்களிடையே எம்பி ஆ.மணி பேசுகையில்:

அரூர்பகுதிக்கு அதிக திட்டங்களை ஒதுக்கிய தமிழக முதல்வர் அவர்களுக்கு அரூர் பகுதி மக்களின் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஒன்றிய அரசின் திட்டங்களை அதிகளவில் அரூர் பகுதிக்கு
கொண்டு வருவேன். பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்படும். அரூர் பகுதி மக்களுக்கு தேவையான திட்டங்கள் கொண்டுவர பாடுபடுவேன் என கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி துணை தலைவர் சூர்யாதனபால், திமுக மாவட்ட துணை செயலாளர் செ.கிருஷ்ணகுமார், விசிக மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன்சர்மா, மதிமுக மாவட்ட செயலாளர் கோ.ராமதாஸ், சிபிஎம் ஏ.குமார், கொமதேக செந்தில், திமுக ஒன்றிய செயலாளர்கள் கோ.சந்திரமோகன், வே.சௌந்தரராசு, அரூர் நகர துணை செயலாளர் விண்ணரசன், நிர்வாகிகள் செல்வதயாளன், மோகன், கணேசன், மதியழகன், குமரன் ஐடிவிங் தமிழழகன், இளைஞரணி கோட்டிஸ்வரன், தங்கசெழியன் ,லயோலாராஜசேகர், அரூர் பேரூராட்சி உறுப்பினர்கள் அருள்மொழி ஜெயலஷ்மி உமாராணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

