ஒகேனக்கல்:காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு 23,912 கன அடியாக உள்ளது
கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து நேற்று இரவு 19,202 கன அடியாக இருந்த நிலையில் தற்போது 25,933கனஅடியாகஅதிகரித்துவருகிறது. அணையின் நீர்மட்டம் 124.80 அடியில் தற்போதைய நீர்மட்டம் 107.60 அடியாக உள்ளது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு 579 கன அடியாக உள்ளது. மைசூர் மாவட்டத்தில் உள்ள கபிணி அணைக்கு நேற்று இரவு வரத்து20,217 கன அடியாக இருந்த நிலையில், தற்போது 22,840 கன அடியாக உயர்ந்து வருகிறது. எனவே அணையில் இருந்து உபரிநீர் திறப்பு நேற்று இரவு 25,000 கன அடியாக இருந்த நிலையில் தற்போது 23,333 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 84 அடியில் 82.36 அடியாக உள்ளது. இரு அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு நேற்று இரவு 25,574 கன அடியாக இருந்த நிலையில் தற்போது 23,912 கன அடியாக தொடர்கிறது

