வயிறு நிறைந்த
21லட்சம் புன்னகை
ஆட்சிக்குக் கிட்டிய
ஆசீர்வாதமாகும்
– கவிஞர் வைரமுத்து
முதலமைச்சரின்
காலை உணவுத்திட்ட
விரிவாக்கம்
ஒரு கல்விப் புரட்சியைப்
பூரணம் செய்யும் காரணமாகும்
மூளையை நிரப்புமுன்
வயிற்றை நிரப்பும்
இந்த
மனிதாபிமானத் திட்டத்தால்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை
மொழியின்
நல்ல வார்த்தைகள் கொண்டு
காலம் பாராட்டும்
வயிறு நிறைந்த மலர்களின்
21லட்சம் புன்னகை
ஆட்சிக்குக் கிட்டிய
ஆசீர்வாதமாகும்
ஏழையின் சிரிப்பில்
இறைவனைக்கண்ட இயக்கம்
மாணவர்களின் சிரிப்பில்
ஸ்டாலினைக் காண்கிறது.என்று தனது எக்ஸ் பக்கத்தில் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

