தென்கரைக்கோட்டை ஊராட்சியில் தமிழக முதலமைச்சரின் காலை உணவுதிட்டம் துவக்கம்.
அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு காலை உணவு திட்டம் விரிவாக்கப்பட்டதன் அடிப்படையில் கடத்தூர் ஊராட்சி ஒன்றியம் தென்கரைக்கோட்டை ஊராட்சி பாத்திமா நகர் கிராமத்தில் உள்ள செயின்ட் ஜோசப் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் விழா ஊராட்சி மன்ற தலைவர் விஐயா சங்கர் தலைமையில் நடைபெற்றது.

விழாவில் பள்ளியின் தாளாளர் அருட்தந்தை வினோத் லூயிஸ் அவர்களும் உதவி திட்ட அலுவலர் வீடுகள் மற்றும் சுகாதாரம் சரவணபவன் வட்டார கல்வி அலுவலர் மகேந்திரன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலைச்செல்வி ,மீனா ,மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உமா மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் சித்ரா செந்தில்குமார் பள்ளியின் தலைமை ஆசிரியர் தங்க சவுரி செல்வதாசன் மகளிர் திட்ட வட்டார மேலாண்மை தலைவர் முத்துசாமி, ஊராட்சி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, உள்ளிட்ட வட்டாரப் பணியாளர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

