தடங்கம் கிராம அரசு உதவிபெறும் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் துவக்கம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்தார்
அதனைத் தொடர்ந்து
தருமபுரி மாவட்டம் தடங்கம் ஊராட்சியில் அமலா அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளியில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் கௌரவ் குமார் மற்றும் தருமபுரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம்.பெ.சுப்ரமணி தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்சசியில் தடங்கம் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா முருகன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
