தருமபுரி அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுதிட்டம் துவக்கம்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று 15.7.2024 திருவள்ளூர் மாவட்டத்தில்அரசு உதவி பெறும் ஆரம்ப பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள 8 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 901 மாணவ மாணவிகள் பயன்பெரும்வகையில் பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் பி. பள்ளிப்பட்டிசெயின்மேரிஸ் துவக்கப்பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் கி .சாந்தி தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி முன்னிலையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா ,திட்ட அலுவலர் அலுவலர் மகளிர் திட்டம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சத்துணவு சுமதி, ஒன்றிய குழு தலைவர் உண்ணாமலை குணசேகரன், மாவட்ட கல்வி அலுவலர் இஸ்மாயில் ,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன் கிருஷ்ணன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுதாகர் வட்டார கல்வி அலுவலர்கள் பழனி ஜெயகாந்தன் ஊராட்சி மன்ற தலைவர் திருமலா தினேஷ் மற்றும் தலைமை ஆசிரியர் மோகனதாஸ் பள்ளி ஆசிரியர்கள் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்

