கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு ஒகேனக்கல் காவிரி ஆற்றங்கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று 15.7.2024 மாலை நிலவரப்படி 10,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது எனவே ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு நாளை 16.7.2024 முதல் மறு உத்தரவு வழங்கும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. என தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி
கி. சாந்தி .இ .ஆ .ப. அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால் அணைகளில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடும் பொழுது வெள்ளப்பெருக்கு ஏற்படும் எனவும் காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்கள் இரவு நேரங்களில் கரையை கடப்பதை தவிர்க்கவும் தங்களுடைய கால்நடைகளையும் காவிரி ஆற்றங்கரைக்கு கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும்,எனவும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

