புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெறும்வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடும்
பி.சண்முகம்
புதிய சட்டங்களை கைவிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தெருமுனை கூட்டம் ஜூலை -14 அன்று தருமபுரி மாவட்டம் கடத்தூர் பஸ்நிலையம் அருகில் நடைபெற்றது.
வட்ட செயலாளர் செயலாளர் தி.வ.தனுசன் ,தலைமைவகித்தார்.
மத்தியகுழு உறுப்பினர் பி.சண்முகம் , சிறப்புறையாற்றினார்.
மாவட்ட செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சோ.அருச்சுணன் ,ஆர்.மல்லிகா ஒன்றியசெயலாளர்கள் அரூர் பி.குமார், மொரப்பூர் கே.தங்கராஜ் , மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி.வஞ்சி கே.என்.மல்லையன், மற்றும் எஸ்.தீர்த்தகிரி , சொக்கலிங்கம், டி.சேகர் , மனோகரன்,கண்ணகி,கிருஷ்ணவேணி உள்ளிட்டோர் பேசினர்.
மத்திய குழு உறுப்பினர் பி.சண்முகம் பேசுகையில்:
இந்தியாவில் 18 – ஆவது நாடாளுமன்ற தேர்தல் முடிந்து கூட்டணி கட்சி தயவுடன் ஆட்சி அமைத்த பிஜேபி, மூன்று குற்றவியல் சட்டங்களை ஜூலை 1 ம் தேதி முதல் அமல்படுத்தியுள்ளது.சுதந்திர இந்தியாவில் சட்டம் நிறைவேற்றப்படுகிறது என்றால் சட்ட அமைச்சகம்,சட்டகமிஷன் இரண்டிலும் ஆலோசனை செய்து பாராளுமனற்த்தில் நிறைவேற்றப்படுவது நடைமுறை, ஆனால் 3 குற்றவியல் சட்டங்கள் நேரடியாக உள்துறை அமைச்சகத்தின் மூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.பாராளுமன்றத்தில் விவாதிக்காமல் எதிர்க்கட்சிகளை வெளியேற்றிவிட்டு புதிய குற்றவியல் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது, ஜனநாயக விரோதமானது, சட்ட ஒழுங்கு மாநில அதிகாரத்திற்கு உட்பட்ட ஆகும். இந்திய சட்டம் 348 – பிரிவில் சட்டம் ஆங்கிலத்தில் இருக்கவேண்டும். மாறாக சமஸ்கிருதத்தில் உள்ளது.சமஸ்கிறுதம் மக்கள் வழக்கு மொழி அல்ல, யாருமே பேசாத மொழியில் எதற்கு சட்டம். இதன் மூலம் இந்துத்துவா கொள்கையை பிஜேபி புகுத்துகிறது.மொழிதிணிப்பை செய்கிறது.இந்த சட்டத்தின் மூலம் அரசுக்கு எதிராக பேசினால் ஜெயில்தான் பெயில்கிடையாது.பிரிட்டீஸ் ஆட்சிகாலத்தில் தான் இதுபோன்ற சட்டங்கள் இருந்தது.
விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது.வேலையின்மை உள்ளது இதற்கு தீர்வுகான மத்திய அரசு தயாராக இல்லை.மாறாக நீதிபதி, நீதிமன்றம் மக்கள் உரிமையை பறிக்கும் நடவடிக்கையில் உள்ளது.
3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக உள்ளூர் நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை வழக்கறிஞர்கள் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நாடுமுழுவதும் போராட்டம் நடத்திவருகிறது.கடந்த 2020 ம் ஆண்டு டிசம்பர் முதல் 2021- ம் ஆண்டு வரை 381 நாட்கள் வேளாண்மை விரோத சட்டத்தை வாபஸ்பெறகோரி டில்லியில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் போராடினர்.
தனிபெரும்பான்மையிடன் பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது இதனை வாபஸ்பெறமுடியாது என்று சொன்ன மோடி அரசு விவசாயிகள் தொடர் போராட்டத்தின் விளைவாக விவசாயிகள் விரோத சட்டத்தை வாபஸ்பெற்றது.
அதேபோன்று இந்த 3 புதிய குற்றவியல் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெறும் வரை மார்க்சிஸ்ட் கட்சி போராடும் என தெரிவித்தார்.
சென்ற மக்களவையின் இறுதிக் கூட்டத்தில் ஜனநாயக விரோத முறையில் நிறைவேற்றப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்களை ஜூலை 1 முதல் ஒன்றிய பாஜக அரசு அமல்படுத்தியுள்ளது.
இதுவரை நடைமுறையில் இருந்து வந்த இந்திய தண்டனைச் சட்டம் பாரதிய நியாய சன்ஹிதா என்ற பெயரிலும், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பாரதிய நாகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா என்ற பெயரிலும், இந்திய சாட்சியச் சட்டம் பாரதிய சாக்சிய அதினியம் என்ற பெயரிலும் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. சட்டங்கள் ஆங்கில மொழியில் மட்டுமே இருக்க வேண்டும் என்ற அரசியல் சாசன விதிகளுக்கு மாறாக, இந்தி, சமஸ்கிருத மொழியில் சட்டங்களின் பெயர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
காவல் நிலையத்தில் புகார் அளித்தவுடன் உரிய விசாரணை மேற்கொண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என்பது இதுவரையில் இருந்த நடைமுறை. இனி 14 நாட்கள் வரையிலும் இதனைத் தாமதப்படுத்த முடியும். இதுவரை காவல் நிலையத்தில் ஒரு கைதியை 15 நாட்கள் வரை மட்டுமே வைத்து விசாரிக்க முடியும். புதிய சட்டத்தின்படி 15 நாட்களுக்கு மேலாகவும் விசாரிக்கலாம். புதிய சட்டம் கை விலங்கு பூட்டுவதற்கும் வழிவகை செய்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக எவர் ஒருவரையும் தேச துரோகி எனக் குற்றம் சுமத்தி கைது செய்வதற்கு புதிய சட்டம் இடமளிக்கிறது.
புதிய சட்டம் நலிவடைந்தவர்களையும், ஏழைகளையும், ஒடுக்கப்பட்ட மக்களையும் மட்டுமில்லாமல், அரசு அதிகாரத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களையும் தண்டிக்கும் வகையில் அமைந்துள்ளது.இது ஜனநாயகத்துக்கு விரோதமானது. அடிப்படை மனித உரிமைகளைப் பறிக்கும் பாஜக அரசின் புதிய சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெருமுனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

