ஓய்வுபெற்ற சத்துணவு,அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்.
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் தருமபுரி மாவட்ட பேரவை கூட்டம் ஜூலை 13 அன்று தருமபுரி ஊர்தி ஓட்டுநர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் பி.சுப்பிரமணி தலைமைவகித்தார்.காரிமங்கலம் ஒன்றிய தலைவர் இ.சண்முகம் வரவேற்றார்.
பாலக்கோடு ஒன்றிய தலைவர் சி.சுப்பிரமணி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்.மாவட்ட செயலாளர் ஆர்.மதலைமுத்து செயலாளர் அறிக்கை வாசித்தார்.சி.கண்ணையன் வரவுசெலவு கணக்கை சமர்ப்பித்தார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர் சங்க மாநில இணைசெயலாளர் கே.குப்புசாமி,துவக்கிவைத்து பேசினார்.மாநிலதுணைத்தலைவர் இ.கிருஷ்ணமூர்த்தி மாநிலபொருளாளர் ஜி.ஆனந்தவள்ளி, முன்னாள் மாநிலதுணைத்தலைவர் எம்.கணேசன் ஆகியோர் சிறப்புறையாற்றினார்.அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் எம்.பெருமாள்,ஜாக்டோ ஜியோ நிதிகாப்பாளர் கே.புகழேந்தி ஆகியோர் வாழ்த்திபேசினர்.
ஒன்றிய தலைவர்கள் எஸ்.பழனிச்சாமி,ஜி.சிவராஜ்,ஏ.பெ ருமாள்,சி.முருகன் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர்.

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் கிராம கடை நிலை ஊழியர்களுக்கு வழங்குவது போல ரூ. 6750 ஓய்வூதியம் வழங்க வேண்டும். தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு வழங்குவதுபோல அகவிலைப்படி வழங்க வேண்டும்.தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு மருத்துவப்படி மற்றும் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு உண்ணாவிரத போராட்டத்தின்போது ஏற்றுக்கொண்ட ஈமச்சடங்கு ரூ.25,000/- வழங்க வேண்டும்.

பெட்ரோல், டீசல், கேஸ் விலையை கட்டுப்படுத்த வேண்டும்.ஏழை மக்கள் பயன்படுத்தும் அத்யாவசியப் பொருட்கள் விலையை கட்டுப்படுத்த வேண்டும்.
விவசாயிகளின் விலை பொருட்களுக்கு கட்டுப்படியான விலையை நிர்ணயம் செய்திட வேண்டும். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும். நதிகளை தேசிய மயமாக்கி இணைக்கவேண்டும். உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

