கர்நாடகா அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு:ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
கர்நாடகா அணைகளில் இருந்து 7 ஆயிரத்து 257 கன அடி உபரி நீர் திறப்பால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக உள்ளது
கனமழை தென்மேற்கு பருவமழை கர்நாடகா, கேரளா மாநிலத்தில் தீவிரமடைந்து உள்ளது. இதனால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிக்கும் குறைந்தும் காணப்படுகிறது. இந்த நிலையில் கபினி அணியில் இருந்து 5 ஆயிரம் கன அடி தண்ணீரும் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 2 ஆயிரத்து 257 கன அடிஎன இரண்டு அணிகளிலிருந்தும் 7 ஆயிரத்து 257கன அடி உபரி நீர் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

நீர் வரத்து அதிகரிப்பு
இதன் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. தற்போது கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து கூடுதலாக உபரி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.ஜூலை 13 அன்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கலுக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது.
இதனால் மெயின் அருவி ,ஐந்தருவி சினிபால்ஸ், உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டியது.மேலும் காவிரி ஆற்றில் நீர் வரத்தை தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
