பட்டுவளர்ச்சித்துறையில் அனைத்து நிலை பணியிடங்களுக்கும் பதவிஉயர்வு வழங்க வலியுறுத்தல்.
தமிழ்நாடு பட்டுவளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாநிலசெயற்குழு கூட்டம் தருமபுரி சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது.
மாநிலதலைவர் வி.வெங்கட்டேஷ் தலைமைவகித்தார்.மாநிலசெயற்குழு உறுப்பினர் வி.விநயா வரவேற்றார்.
மாநிலபொதுச்செயலாளர் என்.சுரேஷ்குமார் வேலை அறிக்கை சமர்பித்தார்.மாநிலபொருளாளர் சி.கல்யாணசுந்திரம் வரவுசெலவு கணக்கை சமர்ப்பித்தார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலதுணைத்தலைவர் கோ.பழனியம்மாள் மாவட்ட செயலாளர் ஏ.தெய்வானை பட்டுவளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் தருமபுரி மாவட்ட பொறுப்பாளர் எம். ஸ்ரீநாத் ஆகியோர் வாழ்த்திபேசினர்.
மாநிலதுணைத்தலைவர்கள் எஸ்.ஹேமநந்தினிதேவி,எஸ்.உதயகுமா ர்,கே.ஆர்.ராஜ்குமார்,மாநிலசெ யலாளர்கள் ஜி.ராஜா ஆர்.சரவணன்,எம்.விஸ்வநாதன் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர்.

பட்டுவளர்ச்சித்துறையில் உள்ள 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட இளநிலை பட்டுஆய்வாளர் மற்றும் அமைச்சுபணியாளர் உள்ளிட்ட அனைத்து நிலை காலிபணியிடங்களை விரைந்து நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரசு பட்டு நூற்பகங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தரத்தினை மேம்படுத்த வேண்டும்.

விவசாயிகளின் நலன்கருதி மத்திய திட்டங்களுக்கு இணையாக நடவு மானியம் மற்றும் புழுவளரப்புமனை மானிய தொகையினை உயர்த்தி வழங்கவேண்டும். பட்டு பண்ணைகளின் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவதற்காக கூடுதல் நிதியை ஒதுக்கவேண்டும்.சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் பணிக்கொடை வழங்கவேண்டும் துணைஇயக்குனர்முதல் உதவிஆய்வாளர்வரை அனைத்து நிலை பணியிடங்களுக்கும் பதவிஉயர்வு வழங்கவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

