முதல்வரின் அறிவிப்பிற்கு தருமபுரி மாவட்ட புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி வரவேற்பு.
இதுகுறித்து புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட செயலாளர் இ.பி.புகழேந்தி வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
ஜூலை 11அன்று தருமபுரி பாளையம் புதூரில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட துவக்க விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் ரூ 500 கோடி மதிப்பிலான மாவட்ட வளர்ச்சிக்கான திட்டங்களை அறிவித்தார் . அதில் அரூர் பேரூராட்சி நகராட்சி யாக அறிவித்தார். அரூர் மருத்துவமனை மேம்பாட்டிற்கு ரூ 50கோடி, நீண்ட நாட்களாக மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் வென்னாம்பட்டி மேம்பாலம் அமைக்க ரூ 38 கோடி ஒதுக்கீடு, மக்களின் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணும் மக்களுடன் முதல்வர் திட்டம் துவக்கபட்டதற்கும் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டக் குழு வரவேற்கிறது.என தெரிவித்துள்ளார்.
