தூய்மை பணியாளர் டேங்க் ஆப்ரேட்டர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கேட்டு ஏஐடியுசி காத்திருப்பு போராட்டம்
உள்ளாட்சி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கேட்டு ஏஐடியுசி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உள்ளாட்சி தொழிலாளர்களுக்கு காலமுறைஊதியம்வழங்கவேண்டும். பணிக்கொடை ஓய்வூதியம் வழங்கவேண்டும்.உள்ளாட்சி தொழிலாளகளுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டு 7 ஆண்டுகள் ஆகிவிட்டாதால் குறைந்தபட்ச ஊதியத்தை மாத ஊதியம் ரூ. 26000 அறிவிக்க வேண்டும்.புதிய ஓய்வூதித்தை திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்.

பேரூராட்சிகள், ஊராட்சிகளில் தூய்மை பணிகள் குடிநீர் விநியோகம் தெருவிளக்கு பாதாள சாக்கடை திட்டம் போன்ற பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் விடக்கூடாது, பள்ளி தூய்மை பணியாளர்களுக்கு ஊராட்சி பணியளர்களுக்கு வழங்கப்படுகின்ற ஊதியம் ரூ. 5000 பள்ளி தூய்மை பணியாளர்களுக்கு வழங்க வேண்டும்.ஊராட்சி பேரூராட்சி பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு கருதி உபகரணங்கள் மற்றும் சீருடை வழங்க வேண்டும்.
ஊராட்சியில் உள்ள அனைத்து டேங்க் ஆப்ரேடர்களுக்கு ஓய்வு பெற்று வீடு திரும்பும் பொழுது வெறும் கையுடன், வெறும் மனமுடன் செல்லும் நிலை இருந்து வருகிறது. இவர்கள் வாழ்வாதாரம் கருதி பணிக்கொடை ரூ. 1 லட்சமும், ஓய்வூதியம் ரூ. 5000 வழங்க வேண்டும்ஊராட்சி கூடுதல் டேங் ஆப்ரேட்டர்கள் 15 ஆண்டுகாலமாக ரூ. 250 ஊதியம் பெற்று வருகிறார்கள் இவர்களுக்கு பணி வரன்முறைப்படுத்தி ஊதிய உயர்வு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
காத்திருப்பு போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் என்.மனோகரன் தலைமைவகித்தார்.மாநில தலைவர் ஆர்.ஆறுமுகம் மாவட்ட செயலாளர் ஆர்.ராமமூர்த்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணை செயலாளர் எம்.மாதேஸ்வரன் விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் ஜெ.பிரதாபன், ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர் கே.மணி ,சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சி.மாதையன்,மாவட்டதுணைத்தலைவர்கள்ஆர்.சுதர்சனம்ஏ.முருகேசன்உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிபேசினர்.

