கிராம வனக்குழுக்களின் செயல்பாடுகளை நவீனமாக்குவது குறித்து பயிலரங்கம்
கிராம வனக்குழுக்களின் செயல்பாடுகளை மின்ஆளுமையின் கீழ் கொண்டு வருவது தொடர்பான பயிலரங்கம் தருமபுரி மாவட்ட வன அலுவலகத்தில் நடைபெற்றது.
தருமபுரி மண்டல வனப்பாதுகாவலர் எச்.சி.பத்மா தலைமைவகித்தார்.
இக்கிராம வனக்குழுக்களின் செயல்பாடுகளை மின் ஆளுமையின் கீழ் நவீனமயமாக்குதல் தொடர்பாக திருநெல்வேலி, களக்காடு முண்டந்துரை புலிகள் காப்பக துணை வனப்பாதுகாவலர் / சூழல் மேம்பாட்டு அலுவலர் ஏ.அன்பு. மற்றும் ஜெனித், ன்ஜீஒ ஆகியோர் விளக்கவுரையாற்றினர்.

தருமபுரி வன மண்டலத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தருமபுரி வனக்கோட்டம், ஒசூர் வனக்கோட்டம், சமூக காடுகள் மற்றும் வனவிரிவாக்கக் கோட்டங்கள் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய வனக்கோட்டங்களின் கீழ் தமிழ்நாடு காடு வளர்ப்புத் திட்டத்தின்படி 273 கிராம வனக்குழுக்கள் உருவாக்கப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது.
இதனால் கிராம வனக்குழுக்களின் செயல்பாடுகள் நவீனமயமாக்கப்பட்டு வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுவது உறுதி செய்யப்படும். என பயிலரங்கத்தில் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வின் போது தருமபுரி மாவட்ட வன அலுவலர். கா.இராஜாங்கம், கிராம வனக்குழுக்களின் செயல்பாடுகளை நவீனமயமாக்குவது தொடர்பாக வனச்சரக அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இப்பயிலரங்கத்தில் தருமபுரி சமூக காடுகள் மற்றும் வனவிரிவாக்க கோட்ட அலுவலர்,சக்திவேல், தருமபுரி வனக்கோட்ட உதவி வனப்பாதுகாவலர்கள் வின்சென்ட். மற்றும் சி.சரவணன், மற்றும் 25க்கும் மேற்பட்ட வனச்சரக அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும் தருமபுரி மண்டலத்தைச் சார்ந்த வனச்சரக அலுவலர்களுக்கு பயிலரங்கம் நடத்தப்பட்டது.

