“மக்களுடன் முதல்வர்” திட்டத்தை துவக்கிவைக்க ஜூலை 11 அன்று மு.க.ஸ்டாலின் தருமபுரியில் துவக்கி வைக்கிறார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வருகின்ற 11.07.2024 அன்று தருமபுரி மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் ”மக்களுடன் முதல்வர்” திட்டம் துவக்கி வைக்க உள்ளதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி இன்று (09.07.2024) பாளையம் புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விழா நடைபெறும் இடத்தையும், முன்னேற்பாடு பணிகளையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்ததாவது:
அரசின் சேவைகள் மக்களுக்கு விரைந்து சென்றடைய “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டம் முதல்வரின் முகவரித்துறை மூலம் நகர பகுதியில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதனை தொடர்ந்து ஊரக பகுதிகளில் வசிக்கும் மக்களின் கோரிக்கை மனுக்களை அவர்களின் இருப்பிடத்திலேயே பெற்று தீர்வு காண ”மக்களுடன் முதல்வர்” திட்டத்தினை ஊரக பகுதிகளில் செயல்படுத்த தமிழக முதல்வர் அவர்களால் ஆணையிடப்பட்டு மேற்படி திட்டத்தின் துவக்க விழா தருமபுரி மாவட்டத்தில், நல்லம்பள்ளி வட்டத்தில், பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11.07.2024 அன்று காலை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்படவுள்ளது.
மேலும் தருமபுரி மாவட்டத்தில் 11.07.2024 முதல் 04.09.2024 வரை அனைத்து ஊரகப்பகுதி மக்களும் பயன்பெறும் வகையில் கீழ்காணும் 70 முகாம்களில் கிராமப்புற மக்களுக்கு 15 அரசு துறைகள் மூலம் 44 வகையான சேவைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டு ஒரு மாத காலத்திற்குள் முடிவுகாணவும், இ-சேவை மையங்களில் மீள விண்ணப்பிக்கப்படும் மக்களுடன் முதல்வர் முகாம் மனுக்களுக்கு 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கவும், தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை கீழ்கண்ட நாட்களில் நடைபெறும் முகாம்களில் வழங்கி விரைந்து தீர்வுகாண கேட்டுக்கொள்ளப்படுகிறது. என தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்தடங்கம் பெ.சுப்பிரமணி, வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சிவக்குமார், தனித்துணை ஆட்சியர்(சபாதி) தனப்பிரியா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், காவல்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

