நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆதித்தமிழர் பேரவை சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மேற்கு மாவட்ட செயலாளர் முருகன் தலைமை வகித்தார் இதில் மாநிலத் துணை பொதுச் செயலாளர் விடுதலை செல்வன், மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் உமா மகேஸ்வரி, கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார், மேற்கு மாவட்ட அமைப்பு செயலாளர் சரவணகுமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிபேசினர்.
ஆதித்தமிழர் பேரவை தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் மீது போடப்பட்ட பொய்வழக்கு மற்றும் அவரது குடும்பத்தார் மீது போடப்பட்ட பொய்வழக்கை திரும்பப்பெற வேண்டும்.ராஜ்குமாரை தாக்கியவர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைதுசெய்யவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மேலும் நீட்தேர்வு ரத்து செய்ய செய்யவேண்டும். இந்திய ஒன்றியம் முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு உடனடியாக நடத்த வேண்டும்.என வலியுறுத்தினர். கோவிலாங்குளம் அழகேந்திரன் ஆவண படுகொலை கண்டித்து முழக்கம் எழுப்பினர்.

