தருமபுரி உண்டி உறைவிடப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர் நியமனம்
தருமபுரி மாவட்டம், பழங்குடியினர் நல உண்டி உறைவிடப் பள்ளிகளில் தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நிரப்பப்படும் இடைநிலை/பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். என மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள தெரிவித்துள்ளதாவது:
தருமபுரி மாவட்டம், அரசு பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் பதவி உயர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணிநாடுநர்களைத் தேர்வு செய்து நிரப்பப்படும் வரை இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016 பிரிவு 19-ன்படி முற்றிலும் தற்காலிக அடிப்படையில் நிரப்பிட ஆணையிடப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில், அரசு பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிடப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட பாடத்திற்கான முழுமையான கல்வித்தகுதியுடன் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
மேலும், தருமபுரி மாவட்டத்தில், அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட பாடத்திற்கான முழுமையான கல்வித்தகுதி பெற்ற நபர்கள் 05.07.2024 முதல் 15.07.2024 வரை மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நிரப்பப்படும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட பாடத்திற்கான முழுமையான கல்வித்தகுதியுடன் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் பழங்குடியினத்தவர் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் பழங்குடியினத்தவர்கள் இல்லையெனில் பட்டியலினத்தவர்கள் இல்லையெனில் பட்டியல் இல்லாத இனத்தவர்கள் தெரிவு செய்யப்படும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நிரப்பப்படும் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தகுதி வாய்ந்த பணிநாடுநர் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் நிலையில் இருப்பின் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கும் அவ்வாறு இல்லையெனில் இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் பணிபுரியும் தகுதி வாய்ந்த தன்னார்வலர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.
தருமபுரி மாவட்டம், அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிடப்பள்ளிகளில் தற்காலிக தொகுப்பூதிய இடைநிலை/பட்டதாரி மற்றும் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களின் காலிப்பணியிடங்கள் விவரம் அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட துவக்க/நடுநிலைப்பள்ளி
இடைநிலைஆசிரியர் 27அரசுபழங்குடியினர்நலஉண்டிஉறைவிடநடுநிலைஉயர்நிலை/மேல்நிலைப்பள்ளிபட்டதாரி ஆசிரியர் 12 அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளிகள் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் 3
மொத்தம் 42 பணியிடங்கள் இவ்வாறு மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
