பெரியாம்பட்டியில் சாலை ஆக்கிரமிப்பால் விபத்து ஏற்படும் அபாயம் சாலையை சீர்செய்ய கோரி ஆட்சியரிடம் மனு.
பெரியாம்பட்டி சாலையில் ஆக்கிரமிப்புகளால் விபத்துகள் ஏற்படும் அபாயம் எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை சீர்செய்ய வேண்டும் என அக்கிராம மக்கள் தருமபுரிமாவட்ட ஆட்சியர் கி.சாந்தியிடம் மனுகொடுத்தனர்.
மனுவின் விபரம் பின்வருமாறு:
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டத்திற்குட்பட்டது பெரியாம்பட்டி இதனைசுற்றி சுமார் 100 குக்கிராமங்களுக்கு மையப்பகுதியாக பெரியாம்பட்டி உள்ளது.பெரியாம்பட்டிக்கு மக்கள் தினசரி ஆயிரக்கணக்கானோர் தங்களின் தினசரி அன்றாட அத்யாவசத் தேவைகளை பூர்த்தி செய்யய வந்து செல்கின்றனர்.
பெரியாம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் தற்போது காய்கறி கடைகள், கோழிக்கடைகள், மீன் கடைகள், மட்டன் கடைகள், பாணிப்பூரி கடைகள்
என சாலையை ஆக்கிரமித்து போக்குவரத்து இடையூராக கடைகள் வைக்கப்பட்டுள்ளன.மற்றும் பலதரப்பட்ட தள்ளு வண்டிகள், ஆட்டோக்கள் மற்றும் நான்கு சக்கர சிறு வாகனங்களை நிறுத்தி சாலையின் இருபுரமும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.இதனால்
சாலை ஆக்கிரமிப்பால் பெரிய சாலை குருகிவிட்டது.
குறிப்பாக இச்சாலையில் பேருந்துகளும் கனரக வாகனங்கள் செல்வது அதிகம். கல்லூரி பள்ளிகளுக்கு பேருந்திற்கு செல்லும் மாணவ, மாணவியர் காலை மாலைமிகவும்சிரமப்படுகின்றனர். இதனால் அவ்வப்போது பள்ளி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் விபத்து ஏற்படுகிறது.பேருந்துகளுக்காக நிற்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.
எனவே பெரியாம்பட்டியில் போக்குவரத்து நெரிசலை சீர்செய்ய தருமபுரியில் இருந்து வரும் பேருந்துகள் தற்போது நிற்கும் இடத்தில் இருந்து சுமார் 100 அடி முன்நோக்கி நிறுத்த வேண்டும் அதே போல் கிருஷ்ணகிரியில் இருந்து வரும் அனைத்து பேருந்தகளையும் சுமார் 200 அடி முன்நோக்கி நிறுத்த வேண்டும்.
காய்கறி, பழக்கடை, பூக்கடைகள், வைக்க மண்டுமாரியம்மன் மற்றும் விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள காலியிடத்தை சுத்தம் செய்து அங்கு அமைக்கவேண்டும்.
ஆட்டோ மற்றும் நான்கு சக்கர இலகுரக வாகனங்கள் தற்போது போக்குவரத்திற்கு இடையூராக இருப்பதுடன் பொதுமக்கள் சென்று வர பெறும் இடையூறு ஏற்படுத்தி வருகிறார்கள். எனவே இதனை பாலக்கோடு பேருந்து வந்து செல்லும் இடத்திலோ அல்லது புற வழி சாலையிலோ அமைக்கவேண்டும்.
சாலையோரம் விற்கப்படும் இறைச்சி கடைகள், மீன் கடைகள், கோழிக்கடைகள் புற வழிச் சாலையில் கடைகளை வைக்க அனுமதிக்கவேண்டும்.என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

