தருமபுரி 95 நீர்நிலைகளில் வண்டல் மண் களிமண் எடுக்க விண்ணப்பிக்கலாம்
தருமபுரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 95 நீர்நிலைகளில் விவசாயம் மற்றும் மண்பாண்ட தொழிலுக்கு இலவசமாக வண்டல் மண் / களிமண் எடுக்க அரசிதழ்கள் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வரசிதழ்களை dharmapuri.nic.in என்ற இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் வண்டல் மண் / களிமண் எடுத்து செல்ல https://tnesevai.tn.gov.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்துள்ளார்.
