கலைஞர்கனவு இல்லதிட்டத்திற்கு போதுமான ஊழியர் கட்டமைப்பை ஏற்படுத்த கோரி ஊராக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்.
மூன்று அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கத்தின் சார்பில் தருமபுரி ஊரக வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக அரசு கலைஞர் கனவு இல்ல திட்டம் மற்றும் ஊரக வீடுகளை பழுதுபார்த்தல் திட்டங்களுக்கு போதுமான ஊழியர் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவேண்டும்.கலைஞர் கனவு திட்ட இல்ல பயனாளர்கள் தேர்வு குறித்து திருத்தப்பட்ட வழிநெறிமுறைகளை உடனே வெளியிடவேண்டும்.கலைஞர் கனவு இல்ல திட்ட பயனாளர்கள் மற்றும் ஊரக வீடுகளை பழுதுபார்த்தல் திட்ட பயனாளர்கள் பட்டியலை இறுதிபடுத்த உரியகால அவகாசம் வழங்கவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முகமது இலியாஸ், தலைமை வகித்தார்.
மாநிலதுணைத்தலைவர் ஆர்.ஆறுமுகம் சிறப்புறையாற்றினார்.
மாவட்ட செயலாளர் வெ.தர்மன்,வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருங்கிணைப்பாளர் ச.இளங்குமரன்,மாவட்ட பொருளாளர் கே.வினோத்குமார்,மாவட்ட துணைத்தலைவர்கள் கோ.கோபிநாத், ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிபேசினார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எம்.சுருளிநாதன்,மாவட்ட செயலாளர் ஏ.தெய்வானை,ஜாக்டோ ஜியோ மாவட்ட நிதிகாப்பாளர் கே.புகழேந்தி ஆகியோர் வாழ்த்திப்பேசினர்

