ஏ.ஜெட்டிஅள்ளி உழவர் சந்தையில் சூரிய ஒளி குளிர்பதன அறை மாவட்ட ஆட்சியர் சாந்தி ஆய்வு
தருமபுரி மாவட்டம், ஏ.ஜெட்டிஅள்ளி உழவர் சந்தையில் சூரிய ஒளி குளிர்பதன அறை மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி இன்று (02.07.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தருமபுரி மாவட்டம், ஏ.ஜெட்டிஅள்ளி உழவர் சந்தையில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கான சிறப்பு அங்காடி, விவசாயிகளுக்கான கடைகள், கழிவறை வசதிகள், தூய்மை பணிகள், ஆழ்துளை கிணறு, குடிநீர் வசதி உள்ள உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு, உழவர் சந்தை வழித்தடம் பொதுமக்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக சீரமைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும், உழவர் சந்தையில் உள்ள சூரிய ஒளி குளிர் பதன அறையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, விவசாயிகளின் விளைப்பொருட்கள் தகுந்த நேரத்தில் பதப்படுத்தி, சந்தைபடுத்த போதிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுகளின் போது, தருமபுரி கோட்டாட்சியர் காயத்ரி, மாவட்ட மேலாளர் (டாஸ்மாக்) மகேஸ்வரி, உதவி ஆணையர் (ஆயம்) நர்மதா, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை துணை இயக்குநர் மு.இளங்கோவன், நல்லம்பள்ளி வட்டாட்சியர் பார்வதி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உள்ளனர்.
