சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: இறப்பு ரூ 10 இலட்சம் நிவாரணம் வழங்க தொல்.திருமாவளவன் எம்பி வலியுறுத்தல்.
மதுரை விமான நிலையத்தில் விடுதலைசிறுத்தைகள் கட்சியின்தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது சிவகாசி, பந்துவார்பட்டியில் நடந்த தீவிபத்தில் உயிரிழந்த நான்குத் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத்தொகை தலா பத்து இலட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
அரசு தலா மூன்று இலட்சம் வழங்கியுள்ள நிலையில் அதனை பத்து இலட்சமாக உயர்த்தி வழங்கிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

