ஈழத் தமிழர்
இருக்கும் வரைக்கும்
உலகம் எங்கும்
தமிழும் இருக்கும்
– கவிஞர் வைரமுத்து
சுவிஸ் நாட்டில்
ஈழத் தமிழர்களைச்
சந்தித்தேன்
கல்லாறு சதீஷ்
வடிவேல் சுரேஷ்
கவிஞர் குமார் ஸ்ரீகாந்தன்
வேதாந்தி இந்துமதி
ஜெயா அன்னலட்சுமி
உள்ளிட்ட உறவுகள்
கலந்துகொண்டார்கள்
ஓர் எரிமலைப் போரில்
வெடித்துச் சிதறி
உலகமெல்லாம் விழுந்த
ஈழத் துண்டுகள் அவர்கள்
செத்துப் பிழைத்த
யுத்தம் கடந்து
தப்பிப் பிழைத்த தங்கங்கள்
அதிர்ந்து சிரித்தாலும்
ஆழத்தில் வலி தெரிகிறது
ஈழத் தமிழரின்
வட்டார வழக்கில்
ஓர் இன்னிசை இருக்கிறது
பேசுங்கள் என்றேன்;
எல்லாரும் பேசினார்கள்
தூர நாட்டில்
பறித்து நட்டாலும்
துளசியின் வாசம் போமோ?
உழைக்கிறார்கள்;
வீழமாட்டோம் என்று
12 முதல் 16 மணிநேரம்
உழைக்கிறார்கள்
ஈழத் தமிழர்
வாட்டிய குளிரில்
ஈட்டிய பொருள்
ஈழத் தமிழர்க்கே
பயன்பட வேண்டும்;
எந்த அமைப்பும், யாரும்
அவர்களைச் சுரண்டக்கூடாது
முடிந்தால்
வாழ்வு கொடுப்போம்;
இல்லையேல் வாழவிடுவோம்
ஈழத் தமிழர்
இருக்கும் வரைக்கும்
உலகம் எங்கும்
தமிழும் இருக்கும்
என தனது எக்ஸ் பக்கத்தில் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்

