டிவிஎஸ் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து ஏஐசிசிடியு கண்டன ஆர்ப்பாட்டம்
டிவிஎஸ் நிர்வாகம் வேலை மறுக்கப்பட்ட 55 தொழிலாளர்களுக்கு வேலை வழங்கக்கோரி அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் (ஏஐசிசிடியு) சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அகிலஇந்திய தொழிற்சங்கமைய கவுன்சில் தருமபுரி மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமைவகித்தார்.
அகில இந்திய தொழிற்சங்கமையகவுன்சில் மாவட்ட செயலாளர் சி.முருகன் தமிழ்நாடு மின்வாரிய ஜனநாயக பொது தொழிலாளர் சங்க தருமபுரி திட்ட செயலாளர் வி.சிவராமன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஜனநாயக பொது தொழிலாளர் சங்க மாநில தலைவர் ஜி.முருகன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தருமபுரி மாவட்ட அமைப்பாளர் ராமதிலகன், அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் மாவட்ட பொருளாளர் ஜெயமணி, தமிழ்நாடு ஜனநாயக கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் செல்வி, மாவட்ட தலைவர் முனியம்மா, தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பணியாளர் சங்க மாவட்ட பொறுப்பாளர் மணிவண்ணன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினார்.
அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் மாநில சிறப்பு தலைவர் இரணியப்பன்,வேலூர் மாவட்ட பொதுச்செயலாளர் சிம்புதேவன்,ஆகியோர் வாழ்த்திப்பேசினர்.

ராணிப்பேட்டைசோளிங்கர்டி.வி.எஸ்,குரூப் பிரேக்ஸ் இந்தியா கம்பெனியின்தொழிலாளர் விரோத போக்கைகண்டித்தும், 55 தொழிலாளர்களை ஆந்திர மாநிலம் நாயுடு பேட்டைக்கு இடம் மாறுதல் செய்த நிர்வாகத்தை கண்டித்தும், 800 ஒப்பந்த தொழிலாளர்களையும் உடனடியாகநிரந்தரம் செய்ய வலியுறுத்தியும், தொழிலாளர்களின் இடமாறுதலை ரத்து செய்யக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
