கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் , புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு அரசு நிதி வழங்கும்
தமிழ்நாட்டில் சொந்தக் கட்டிடங்களில் இயங்கும் கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு 2016-17 ஆம் ஆண்டு முதல் நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது.
மேற்படி திட்டத்தின் கீழ் பின்வருமாறு கூடுதல் பணி மேற்கொள்ளவும் , கட்டிடத்தின் வயதிற்கேற்ப மானிய தொகை உயர்த்தியும் அரசு ஆணையிடப்பட்டுள்ளது.
கூடுதலாக மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள பணிகள் விவரம்
சுவிசேஷம் வாசிக்கும் ஸ்டான்ட் , மைக்செட் (ம) ஒலிப்பெருக்கிநற்கருணை பேழை பீடம்திருப்பலிக்கு தேவையான கதிர்பாத்திரங்கள்,சுரூபங்கள்,மெழுகுவர்த்தி ஸ்டான்ட்டுகள் (ம) பக்தர்கள் அமர்ந்து முழங்காலிட்டு இருக்க தேவையான பெஞ்சுகள் போன்ற ஆலயங்களுக்கு தேவையானஉபகரணங்கள்.தேவாலயத்திற்கு சுற்றுச்சுவர் வசதி அமைத்தல்.
தேவாலயத்தின் கட்டிடத்தின் வயதிற்கேற்ப உயர்த்தப்பட்டள்ள மானிய தொகை விவரம்
தேவாலய கட்டிடத்தின் வயது 10 வருடம் முதல் 15 வருடம் வரைதற்போது வழங்கப்பட்டு வரும் மானியம் ரூ 2 இலட்சம் உயர்த்தி வழங்கப்படும் மானியம் ரூ 10 இலட்சம் ஆகும்.15 முதல் 20 வருடம் வரை உள்ள கட்டிடங்களுக்கு தற்போது வழங்கப்படும் மானியம் ரூ 4 இலட்சம், உயர்த்தி வழங்கப்பட்ட தொகை ரூ 15 இலட்சம்.20 வருடத்திற்கு மேல் இருப்பின் தற்போதுவழங்கப்படும்மானியம்ரூ6இலட்சம்உயர்த்தி வழங்கப்பட்ட மானியம் ரூ 20 இலட்சம் ஆகும்
மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு மூலம் பெறப்படும் விண்ணப்பங்களை பரீசிலித்து, நிதியுதவி கோரி விண்ணப்பிக்கும் கிறித்துவ தேவாலயங்களை ஸ்தல ஆய்வு மேற்கொள்ளப்படும். கட்டிடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல இயக்குநருக்கு நிதி உதவி வேண்டி பரிந்துறை செய்யப்படும். நிதி உதவி இரு தவணைகளாக மாவட்ட ஆட்சித் தலைவரின் ஒப்புதலுடன் தேவாலயத்தின் வங்கிக் கணக்கில் மின்னணு பரிவர்த்தணை மூலம் செலுத்தப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்துள்ளார்.

