தருமபுரி வரலாற்று சின்னமான சர் தாமஸ் மன்றோ நினைவுத்தூண் புனரமைப்பு
தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் ஆய்வின் போது பராமரிப்பின்றி ஆக்கிரமிப்புடன் காணப்பட்டவரலற்றுச்சின்னமான சர்தாமஸ்மன்றோ நினைவுத்தூண் அடையாளம்காணப்பட்டு, ஆக்கிரமிப்பினை அகற்றி புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள நகராட்சி நிர்வாகத்திற்கு உத்திரவிட்டார்.

அதனை தொடர்ந்து வங்கியின் ஒத்துழைப்புடன், தருமபுரி நகராட்சி நிர்வாகத்தால் புனரமைக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி,அவர்களால் இன்று (28.06.204) திறந்து வைக்கப்பட்டது. எவ்வித ஆக்கிரமிப்பும் இன்றி வரலாற்றுச்சின்னத்தை பாதுகாத்து வரலாற்றினை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவேண்டியது நம் அனைவரின் தலையாய கடமையாகும் என்று தெரிவித்து நகராட்சி சார்பில் முறையாக பராமரிக்க வேண்டும் என உத்தரவிட்டார். உடன் நகராட்சி ஆணையாளர் புவனேஷ்வரன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்

